செய்திகள்

தஞ்சையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2018-10-17 17:42 GMT   |   Update On 2018-10-17 17:42 GMT
தஞ்சையில் கட்டிட வேலை செய்தபோது மின்சாராம் தாக்கியதில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தஞ்சாவூர்:

தஞ்சை வடக்கு அலங்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். கட்டிட என்ஜினீயரான இவரிடம் 20-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவரிடம் மேற்கு வங்காள மாநிலம் குல்ஜி மாவட்டத்தை சேர்ந்த நூர்தீன்(வயது 35) என்பவரும் பணியாற்றி வந்தார்.

தஞ்சை தெற்கு வீதியில் நேற்று முன்தினம் நூர்தீன் கட்டிட வேலையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கட்டிடத்தின் மேல்பகுதியில் வேலை பார்ப்பதற்காக இரும்பு குழாய்களை நுார்தீன் எடுத்து சென்றார். இதில் கட்டிடத்தின் அருகில் சென்ற மின்சார வயர் மீது அவர் எடுத்து சென்ற இரும்பு குழாய் பட்டது.

இதில் மின்சாரம் தாக்கியதில் நூர்தீன் கீழே தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நூர்தீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News