தேனி அருகே மது குடித்ததை கண்டித்ததால் முதியவர் தற்கொலை
தேனி:
தேனி அருகே தேவாரம் லெட்சுமிநாயக்கன்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 74). மது பழக்கத்துக்கு அடிமையானவர். மது குடிப்பதை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கருப்பசாமி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே மணியக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 30). கட்டிட தொழிலாளி. நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த சுந்தர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போடி அருகே சங்கராபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 31). இவரும் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.