செய்திகள்

திருச்சுழி அருகே தொழிலாளி அடித்துக்கொலை

Published On 2018-10-15 11:00 GMT   |   Update On 2018-10-15 11:00 GMT
திருச்சுழி அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ளது சீலம்பட்டி. இங்கிருந்து ரெட்டியபட்டி செல்லும் சாலையில் உள்ள கண்மாய் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடந்துள்ளது. இதனை கண்டவர்கள், திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவரின் தலை மற்றும் உடலில் காயங்கள் காணப்பட்டன.

எனவே அவரை யாரோ அடித்துக்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். பிணமாக கிடந்தவர் யார்? கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது மர்மமாக உள்ளது.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News