செய்திகள்

நிலக்கோட்டையில் ஆசிரியைக்கு கண்டக்டர் செக்ஸ் தொல்லை

Published On 2018-10-12 17:03 GMT   |   Update On 2018-10-12 17:03 GMT
நிலக்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்த முகமது கவுஸ்மைதீன் என்பவரது மகள் நிலோபர் காமு (வயது27). இவர் பழனி அருகில் உள்ள சின்னகாந்திபுரம் அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக கடந்த 2013-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் வத்தலக்குண்டுவில் இருந்து பழனிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

அப்போது தனியார் பஸ் கண்டக்டரான பெரியகுளம் தென்கரை இந்திரா நகரை சேர்ந்த பாண்டி மகன் செல்லத்துரை (வயது32). அவரை காதலிப்பதாக கூறி உள்ளார். ஆனால் இதற்கு ஆசிரியை மறுப்பு தெரிவித்துள்ளார்.

இருந்தபோது தினமும் பஸ்சில் வரும்போது ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அவருக்கு தெரியாமலேயே அவரது செல்போன் எண்ணை பெற்று அதில் ஆபாச குறுந்தகவல் அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டக்டர் செல்லத்துரையை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News