செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பேராசிரியருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

Published On 2018-10-08 16:26 GMT   |   Update On 2018-10-08 16:26 GMT
அரக்கோணத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவள்ளுவர் பல் கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1,342 மாணவ, மாண விகள் படித்து வருன்றனர்.

கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியர் ஒருவர் மாணவிகள் சிலருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக வேலூர் கலெக்டர் ராமனுக்கு புகார் சென்றது.

இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்பேரில், திருவள்ளுவர் பல்கலைக் கழக துணை வேந்தர் முருகன் கடந்த மாதம் 28-ந் தேதி கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார். அதன் பிறகு, பேராசிரியர் மீதான பாலியல் புகார் விசாரணை கிடப்பில் போடப்பட்டது.

மேலும், பேராசிரியை காப்பாற்றுவதற்காக மாணவ, மாணவிகளை சமரசப்படுத்தும் முயற்சியில் கல்லூரி நிர்வாகம் தீவிரமாக களமிறங்கியது. பாலியல் தொல்லை விவகாரத்தை பெரிதுப்படுத்தினால், கல்லூ ரியில் இருந்து நீக்கப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று மாணவ-மாணவிகள் அச்சுறுத்தப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கல்லூரிக்கு வந்தவுடன் ஒன்றாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு ஊர்வலமாக சென்று காஞ்சீபுரம்-அரக்கோணம் சாலையில் உள்ள சேந்தமங்கலம் ரெயில்வே கேட்அருகில் மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர்.

தகவலறிந்துவந்த நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகா லிங்கம் மற்றும் போலீசார், கல்லூரி முதல்வர் கவிதா ஆகியோர் மாணவ, மாணவிகளை கலைந்து கல்லூரிக்கு செல்லுமாறு எச்சரித்தனர்.

போராட்டத்தை கைவிட மறுத்தால், கல்லூரியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் எச்சரித்தனர். இதை கவனித்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர், மாணவிகளுக்கு ஆதரவாக திரண்டு போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவிகளை மிரட்டுவதில் அர்த்தமில்லை. உங்கள் வீட்டு பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சினை என்றால் ‘சும்மா விட்டு விடுவீர்களா’ என்று கேள்வி எழுப்பிய பெண்கள், புகார் சம்பந்தமாக பேராசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News