செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடும் கார் தீப்பிடித்து விபத்து
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடும் காரில் எதிர்பாராத விதமாக காரின் என்ஜினிலிருந்து புகை வந்து திடீரென தீப்பற்றியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர், கம்மாப்பட்டி ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது42). இவர் தனது காரில் மதுரைக்கு சென்று விட்டு, நள்ளிரவில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் காவலர் துப்பாக்கி சுடும் மைதானம் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக காரின் என்ஜினிலிருந்து புகை வந்து திடீரென தீப்பற்றியுள்ளது.
இதனையடுத்து டிரைவரும் ராஜகோபாலும் காரைவிட்டு வெளியே வந்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசம் அடைந்தது. இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், கம்மாப்பட்டி ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது42). இவர் தனது காரில் மதுரைக்கு சென்று விட்டு, நள்ளிரவில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் காவலர் துப்பாக்கி சுடும் மைதானம் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக காரின் என்ஜினிலிருந்து புகை வந்து திடீரென தீப்பற்றியுள்ளது.
இதனையடுத்து டிரைவரும் ராஜகோபாலும் காரைவிட்டு வெளியே வந்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசம் அடைந்தது. இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.