செய்திகள்
அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம்- திமுகவினர் 24 பேர் மீது வழக்கு
அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம் வினியோகித்ததாக திமுகவினர் உள்பட 24 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #DMK #TNGovernment
திருவள்ளூர்:
திருவள்ளூர் ரெயில் நிலையம் பகுதியில் தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் இஸ்ரேல் தலைமையில் நிர்வாகிகள் தமிழக அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
‘‘கலெக்சன், கரப்ஷன், கமிஷன்’’ என்ற வாசகங்கள் அந்த துண்டு பிரசுரத்தில் இடம்பெற்று இருந்தது.
இதையடுத்து அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம் வினியோகித்ததாக தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் இஸ்ரேல் உள்பட 9 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.
இதைப்போல் ஊத்துக்கோட்டையை அடுத்த தாராட்சி பஸ்நிலையம் பகுதியில் தி.மு.க. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை போலீசார், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக், சண்முகம், பழனி, வேலு உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #DMK #TNGovernment
திருவள்ளூர் ரெயில் நிலையம் பகுதியில் தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் இஸ்ரேல் தலைமையில் நிர்வாகிகள் தமிழக அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
‘‘கலெக்சன், கரப்ஷன், கமிஷன்’’ என்ற வாசகங்கள் அந்த துண்டு பிரசுரத்தில் இடம்பெற்று இருந்தது.
இதையடுத்து அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம் வினியோகித்ததாக தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் இஸ்ரேல் உள்பட 9 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.
இதைப்போல் ஊத்துக்கோட்டையை அடுத்த தாராட்சி பஸ்நிலையம் பகுதியில் தி.மு.க. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை போலீசார், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக், சண்முகம், பழனி, வேலு உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #DMK #TNGovernment