செய்திகள்

மழையால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கக்கோரி மாணவ, மாணவிகள் போராட்டம்

Published On 2018-10-06 14:40 GMT   |   Update On 2018-10-06 14:40 GMT
நிலக்கோட்டை அருகே மழையினால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்ககோரி மாணவ-மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கருத்தாண்டிபட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு பள்ளி அருகே இருந்த பாலம் மழையினால் சேதமடைந்தது. இதனை சீரமைக்கவேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் நேற்று அப்பகுதியில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோசமிட்டனர். இதனால் சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News