செய்திகள்

பழனியில் வெவ்வேறு இடங்களில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2018-10-05 17:15 GMT   |   Update On 2018-10-05 17:15 GMT
பழனியில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கெண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:

பழனியை அடுத்த சின்னக்கலையம்புத்தூர் வி.கே.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 46). ஆட்டோ டிரைவர். இவர் தனது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமலிங்கம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமலிங்கத்துக்கு அனிதா என்ற மனைவியும், 2 மகன்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பழனி சத்யா நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் மருதம். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (39). இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றும் வழக்கம் போல் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ராஜேஸ்வரி, வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பழனி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News