செய்திகள்
தர்மபுரி அருகே தீ விபத்தில் சிக்கிய தொழிலாளி பலி
தர்மபுரி அருகே தீ விபத்தில் சிக்கிய தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 48). தொழிலாளியான இவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் உள்ள மண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்து பம்ப் செய்தார்.
அப்போது திடீரென ஸ்டவ் வெடித்ததால் உடல் கருகிய அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்றிரவு இறந்தார். இது குறித்து ஒகேனக்கல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.