செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

Published On 2018-09-27 17:22 GMT   |   Update On 2018-09-27 17:22 GMT
பெட்டிக்கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.
குளித்தலை:

குளித்தலை பெரியபாலம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில் புகையிலை பொருளான மூக்குப் பொடியை விற்ற பெரியபாலம் சீனிவாசா நகரைச் சேர்ந்த திலகர் (வயது 55 ) என்பவரையும், மற்றொரு பெட்டிக்கடை ஒன்றில் புகையிலை பொருட்கள் விற்ற குளித்தலை வைசியாள் தெருவைச் சேர்ந்த பாலாஜி (40) என்பவரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் இருவரது பெட்டிக்கடைகளிலும் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
Tags:    

Similar News