செய்திகள்

சுவாமிமலை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் - அண்ணன், தம்பி கைது

Published On 2018-09-25 11:13 GMT   |   Update On 2018-09-25 11:13 GMT
சுவாமிமலை அருகே மகனை திட்டியதை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.
சுவாமிமலை:

சுவாமிமலை அருகே மணப்படையூர் பெரியார் வீதியில் வசிப்பவர் நாகராஜன் மனைவி வசந்தா (வயது 45).

சம்பவத்தன்று இவரது மகன் மகேந்திரனை சிலர் திட்டியதாக கூறப்படுகிறது. அதனால் தன் வீட்டின் அருகே நின்று கொண்டு தன் மகனை திட்டியது யார் என கேட்டுள்ளார் அப்பொழுது அதே ஊரில் வசிக்கும் ராமலிங்கம் மகன்கள் குமார் (43), விஜயராகவன் (37) ஆகிய இருவரும் நாங்கள் தான் என கூறியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட வசந்தாவை கல்லால் தாக்கி கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து வசந்தா சுவாமிமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசி அய்யா, அண்ணன்-தம்பியான குமார் மற்றும் விஜயராகவன் ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Tags:    

Similar News