செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Published On 2018-09-25 07:50 GMT   |   Update On 2018-09-25 07:50 GMT
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #MeteorologicalDepartment
சென்னை:

தெற்கு உள் கர்நாடகா பகுதியில் இருந்து தமிழகத்தின் மன்னார் வளைகுடா வரையில் மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் வெப்ப சலனம் காரணமாகவும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.



அடுத்த 3 நாட்களுக்கு அநேக இடங்களிலும் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவிற்கு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஓசூரில் 8 செ.மீ., கோவையில் 6 செ.மீ, வால்பாறையில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

நீலகிரி ஜி.பஜார், பீளமேடு, சூளகிரி, பரமத்தி, கோவை தெற்கு, ஈரோடு ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும் தாளவாடி, தளி, அரவாக்குறிச்சி, ஏற்காட்டில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. #Rain #MeteorologicalDepartment

Tags:    

Similar News