செய்திகள்

மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2018-09-22 17:47 GMT   |   Update On 2018-09-22 17:47 GMT
சிறுகனூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சமயபுரம்:

சிறுகனூர் அருகே மணல் அள்ளி செல்வதாக மண்ணச்சநல்லூர் தாசில்தார் ரேணுகாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்படி 94 கரியமாணிக்கம் வருவாய் ஆய்வாளர் வனிதா கன்னியாகுடி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள உப்பாற்றில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருப்பதைப் பார்த்து அங்கு விரைந்து சென்றார். அவரைக் கண்டதும் மணல் அள்ளியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி சிறுகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கன்னியாகுடியை சேர்ந்த முருகையா மகன் நாகராஜ்(வயது38), அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி (40) ஆகிய இருவரையும் கைது செய்து லால்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 
Tags:    

Similar News