செய்திகள்

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி பலி

Published On 2018-09-17 16:11 GMT   |   Update On 2018-09-17 16:11 GMT
சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
திருச்சி:

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திராநகரை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது 25). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவர் தன்னுடன் வேலை பார்த்த கொத்தனார் அருளானந்தத்தை(37) அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவானைக்காவல் ஒய்ரோட்டில் சென்றார்.அப்போது அவருடைய மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையோரம் நிறுத்தி இருந்த டிப்பர் லாரியின் பின்புறத்தில் பயங் கரமாக மோதியது. இதில் கோகுல்ராஜ், அருளானந்தம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கோகுல்ராஜ் இறந்தார். அருளானந்தத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வடக்கு போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News