செய்திகள்
வெம்பாக்கத்தில் ரத்தக்காயங்களுடன் முதியவர் பிணம்
வெம்பாக்கம் அருகே உடலில் ரத்தக்காயங்களுடனும் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் அடுத்த தூசி 3 கண் பாலம் அருகில் இன்று காலை முகத்தில் பலத்த காயங்களுடனும், உடலில் ரத்தக்காயங்களுடனும் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் பிணம் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.
கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ மற்றும் உதவியாளர் சேகர் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிந்து அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தாரா? அல்லது அடித்துக் கொல்லப்பட்டு பிணம் வீசப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.