செய்திகள்

காட்டிக் கொடுப்பார் என்ற பயத்தால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதவி- துரைமுருகன்

Published On 2018-09-15 05:53 GMT   |   Update On 2018-09-15 05:53 GMT
பதவி கொடுக்கவில்லை என்றால் காட்டிக் கொடுப்பார் என்ற பயத்தால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதாக துரைமுருகன் விமர்சித்துள்ளார். #DMK #DuraiMurugan #ADMK #Vijayabaskar
பீளமேடு:

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கேள்வி : தமிழகத்தில் தற்போது மின்தடை அதிகமாக உள்ளதே?

பதில் : மின் தடையே இருக்காது என ஒரு அமைச்சர் சொல்லி உள்ளார். மற்றொருவர் நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறுகிறார். முதலில் அமைச்சர்கள் உட்கார்ந்து நாட்டின் மின்சார நிலைமையை பேசிய பின்னர் மக்களுக்கு தெளிவாக கூற வேண்டும்


கே: குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதே?

ப : பதவி கொடுக்கவில்லை என்றால் யார்- யாரை காட்டிக் கொடுப்பார் என்ற பயத்தால் தான் அமைச்சருக்கு இந்த பதவி வழங்கப்பட்டு இருக்கலாம்

கே : இலங்கையில் இறுதிப் போரின் போது இந்திய அரசு உதவி செய்ததாக ராஜபக்சே கூறி இருக்கிறாரே?

ப : அதுபற்றி எனக்கு தெரியாது.

கே : 7 பேர் விடுதலையில் கவர்னர் காலதாமதம் செய்வதாக தகவல் வருகிறதே?

ப : தமிழக கவர்னர் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவில்லை என தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் துரைமுருகன் ஈரோட்டில் நடைபெறும் ம.தி.மு.க. மாநாட்டில் கலந்து கொள்ள சென்றார். #DMK #DuraiMurugan #TNMinister #Vijayabaskar
Tags:    

Similar News