செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலம் அருகே பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு- வீடு புகுந்து மர்ம நபர்கள் துணிகரம்
ஆர்.எஸ்.மங்கலம் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள குருமிலன்குடியை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மனைவி சங்கீதா(வயது 28), இவர் சம்பவத்தன்று வீட்டின் கதவை சாத்திக் விட்டு உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் வீட்டின் கதவை நைசாக திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சங்கீதாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி செயினை பறித்தினர். உடனே திடுக்கிட்டு எழுந்த அவர் திருடன்.... திருடன்... என கூச்சலிட்டர். உஜரான திருடர்கள் அங்கிருந்து தப்பினர்.
இதுகுறித்து சங்கீதா ஆர்.எஸ்மங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றார். #tamilnews
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள குருமிலன்குடியை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மனைவி சங்கீதா(வயது 28), இவர் சம்பவத்தன்று வீட்டின் கதவை சாத்திக் விட்டு உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் வீட்டின் கதவை நைசாக திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சங்கீதாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி செயினை பறித்தினர். உடனே திடுக்கிட்டு எழுந்த அவர் திருடன்.... திருடன்... என கூச்சலிட்டர். உஜரான திருடர்கள் அங்கிருந்து தப்பினர்.
இதுகுறித்து சங்கீதா ஆர்.எஸ்மங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றார். #tamilnews