செய்திகள்

பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக பொதுத்தேர்வு எழுதலாம்- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Published On 2018-09-04 07:04 GMT   |   Update On 2018-09-04 07:04 GMT
பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 8, 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #MInisterSengottaiyan
சென்னை:

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 8, 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதலாம். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்கும் தனித்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுதேர்வு மற்றும் ஜூன், ஜூலையில் உடனடித் தேர்வுகள் நடக்கும்.



இவ்வாறு அவர் கூறினார். #MInisterSengottaiyan
Tags:    

Similar News