செய்திகள்

அதிமுக பிரமுகரின் உறவினர் மீது தாக்குதல்- 20 பேர் மீது வழக்கு

Published On 2018-09-01 09:54 GMT   |   Update On 2018-09-01 09:54 GMT
ஒரத்தநாடு அருகே அதிமுக பிரமுகரின் உறவினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பருத்தி கோட்டையை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 45). இவர் அ.தி.மு.க. கிளை கழக செயலாளராக உள்ளார். இவரது பக்கத்து வீட்டில் அவரது அண்ணன் மகன் கணேசன் என்பவர் வசித்து வருகிறார்.

நேற்று கணேசன் அதே பகுதியில் நடந்த ஒரு காதுகுத்து விழாவுக்கு சென்றார். அவரது மோட்டார் சைக்கிளை எடுக்க சென்ற போது பொன்னாப்பூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துள்ளார். அவரது மோட்டார் சைக்கிள் டயர் கணேசனின் கால் மீது ஏறியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆத்திரத்துடன் அங்கிருந்து சென்ற வாலிபர் தனது நண்பர்கள் உள்பட 20 பேரை அழைத்து கொண்டு கணேசன் வீட்டிற்கு சென்று அவரை தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கணேசன் அருகில் உள்ள ராஜ கோபால் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கணேசனை வெளியில் விடுமாறு கூறி ராஜகோபால் வீட்டில் இருந்து பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர்.பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த கணேசன் ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது பற்றிய புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட உதயமூர்த்தி, தாமரை செல்வன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News