செய்திகள்

ஜாமீனில் வந்தவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2018-08-29 16:04 GMT   |   Update On 2018-08-29 16:04 GMT
பெரம்பலூர் அருகே ஜாமீனில் வெளியே வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பில்லங்குளம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 50). விவசாயி இவருக்கும் இவரது தம்பிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கை.களத்தூர் போலீசார் அங்க முத்துவை கைது செய்து, பெரம்பலூர் சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அங்கமுத்து, மனமுடைந்து பாடாலூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஏரியில் உள்ள படித்துறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News