செய்திகள்

பெண்ணிடம் நகை பறிப்பு- சென்னை வாலிபர் 2 பேர் கைது

Published On 2018-08-26 10:20 GMT   |   Update On 2018-08-26 10:20 GMT
பெண்ணிடம் 7 பவுன் நகை மற்றும் செல்போனை பறித்த சென்னை வாலிபர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்:

மணவாளநகர் சப்-இன்ஸ் பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் ஒண்டிக்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த கோட்டீஸ்வரன், வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டன் என்பதும் அவர்கள் வெங்கத்தூர் அருகே பெண் ஒருவர் அணிந்திருந்த 7 சவரன் நகை மற்றும் செல்போனை பறித்து சென்றதும் தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News