செய்திகள்

பாளையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்- 402 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

Published On 2018-08-25 11:11 GMT   |   Update On 2018-08-25 11:11 GMT
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை கிளை சார்பில் பாளையில் மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 402 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை கிளை சார்பில் ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கான தடகளம், நீச்சல், டென்னிஸ், வாலிபால் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஆகஸ்ட்டு மாத விளையாட்டு போட்டிகள் நேற்று பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 402 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். போட்டியை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி தாளாளர் திருமாறன் தொடங்கி வைத்தார். தடகளப் போட்டியில் மாணவி கவிமதி, கார்த்திகா, கவுசல்யா ஆகியோர் வெற்றிபெற்றனர். பெண்களுக்கான வாலிபால் போட்டியில் குற்றாலம் பராசக்தி கல்லூரி அணி முதலிடமும், பாளை சாராள் தக்கர் கல்லூரி 2-வது இடமும் பெற்றன.

ஆண்களுக்கான டென்னிஸ் போட்டியில் கிறிஸ்துராஜா மாணவர் முதலிடமும், விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி, ஸ்ரீஜெயந்துர சரஸ்வதி ஸ்வாமிகள் பள்ளி மாணவர்கள் 2-வது இடம் பெற்றனர். நீச்சல் போட்டியில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி முதலிடமும், சின்மயா பள்ளி 2-வது இடமும் பெற்றன.

பின்னர் மாலையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி சான்று, பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வீரபத்ரன், பயிற்சியாளர் சத்தியகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
Tags:    

Similar News