செய்திகள்
விஜயகாந்த் தனது முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் - ஓ. பன்னீர் செல்வம் கிண்டல்
மக்களவை தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் விஜயகாந்த் உறுதியாக இருக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோவையில் தெரிவித்துள்ளார். #OPS #ADMK #VijayaKanth #MKStalin
கோவை:
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுகவில் மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்து விட்டு கட்சிப்பணிக்கு செல்ல வேண்டும் என்பது உங்களது யூகம். அதற்கு பதில் கூற முடியாது.
மக்களவை தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் இருந்து விஜயகாந்த் பின்வாங்காமல் உறுதியாக இருக்க வேண்டும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்தால், முதல்வருடன் கலந்து ஆலோசித்து செல்வோம்
என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.