செய்திகள்
வியாபாரத்தில் மோதல்- பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வாலிபர் கைது
தேனி அருகே வியாபாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தேனி:
தேனி அரண்மனைபுதூர் முல்லைநகரை சேர்ந்த செந்தில்ராமன் மனைவி வித்யா (வயது36). இவரும் சமதர்மபுரம் பி.டி.ஆர். தெருவை சேர்ந்த வீரமணிகண்டன் (33) என்பவரும் கூட்டாக ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தனர். இதில் வித்யாவிற்கு உரிய பங்கு தொகையை செலுத்தவில்லை என அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் முருகேசனும், வீரமணிகண்டனும், வித்யா வீட்டிற்கு சென்று அவரை தாக்கினர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.
கூடலூர் அருகில் உள்ள வெட்டுக்காடு ஊமையன்தொழு பகுதியை சேர்ந்தவர் மணி (55). இவர் தனது மருமகன் ராஜசேகர் (38) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அந்த நிலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு ராஜசேகரன் கேட்டு வந்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று இரவு தோட்டத்தில் புகுந்த ஒரு கும்பல் மணியை தாக்கி காயப்படுத்தி சென்று விட்டனர். இது குறித்து அவர் குமுளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
தேனி அரண்மனைபுதூர் முல்லைநகரை சேர்ந்த செந்தில்ராமன் மனைவி வித்யா (வயது36). இவரும் சமதர்மபுரம் பி.டி.ஆர். தெருவை சேர்ந்த வீரமணிகண்டன் (33) என்பவரும் கூட்டாக ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தனர். இதில் வித்யாவிற்கு உரிய பங்கு தொகையை செலுத்தவில்லை என அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் முருகேசனும், வீரமணிகண்டனும், வித்யா வீட்டிற்கு சென்று அவரை தாக்கினர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.
கூடலூர் அருகில் உள்ள வெட்டுக்காடு ஊமையன்தொழு பகுதியை சேர்ந்தவர் மணி (55). இவர் தனது மருமகன் ராஜசேகர் (38) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அந்த நிலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு ராஜசேகரன் கேட்டு வந்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று இரவு தோட்டத்தில் புகுந்த ஒரு கும்பல் மணியை தாக்கி காயப்படுத்தி சென்று விட்டனர். இது குறித்து அவர் குமுளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews