search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Business"

    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
    • வெளி மாநில வியாபாரிகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை எடுத்து வந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் பகுதிகளில் வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானது.

    இந்த வாரச்சந்தைக்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

    சாதாரண நாட்களில் நடைபெறும் வாரச்சந்தையில் ரூ.2 கோடி ரூபாய்க்கும், பண்டிகை காலங்களில் நடைபெறும் ரூ.5 கோடி ரூபாய் வரையிலும் வர்த்தகம் நடைபெறும். வெளி மாநில வியாபாரிகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை எடுத்து வந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 16-ந் தேதி முதல் அமலுக்கு வந்ததால் ரூ.50 ஆயிரம் மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்காக நிலை கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நேற்று இரவு கூடிய வார ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-

    தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வெளி மாநில வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். இன்று வார ஜவுளி சந்தை நடைபெறும் நாளில் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இதற்கு அஞ்சி வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. குறிப்பாக சிறு குறு வியாபாரிகள் ரொக்க பணத்திற்கு உரிய ஆவணங்கள் எடுத்து வருவதில் சிரமம் உள்ளதால், இரவு நடைபெற்ற ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது.

    இதனால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில், சில்லரை வர்த்தகம் மட்டும் வழக்கம் போல் நடைபெற்றது. வழக்கமான விற்பனையில் 50 சதவீதம் மட்டுமே இருந்ததாக தெரிவித்த வியாபாரிகள். இனி தேர்தல் முடியும் வரை இதே நிலைமைதான் நீடிக்கும் என்றும், வியாபாரிகளுக்கு தேர்தல் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து விலகி, வணிக வாழ்க்கையை தொடர இருக்கிறார்.
    • புதிய பொறுப்புகளை ஏற்கவும், தனது குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவழிக்கவும் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்

    ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் அரசியலில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் கூறியதாவது, "ஆஸ்திரேலியாவை மேலும் வலுவான பாதுகாப்புமிக்க செழிப்பான ஒரு நாடாக மாற்ற, நாட்டின் உயரிய நிலையில் சேவையாற்றும் ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக குடும்பத்தினர், நண்பர்கள், வாக்காளர்கள் ஆகியோருக்கு நன்றி. அனைத்துலக பெருநிறுவத்துறையில் புதிய பொறுப்புகளை ஏற்கவும், தனது குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவழிக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளேன். மேலும், உலகளாவிய கார்ப்ரேட் துறையில் புதிய சவால்களை எடுப்பேன்" எனத் தெரிவித்தார்.

    கொரோனா பெருந்தொற்று காலங்களின் போது, அமைச்சரவைக்கோ, பதவியில் இருப்பவர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தெரிவிக்காமல், இரகசியமாக பல அமைச்சர்களின் பதவிகளில் தன்னை நியமித்துக் கொண்டவர் ஸ்காட் மோரிசன் என்பது குறிப்பிடதக்கது.  

    • கடந்த 20நாட்களாக மார்கெட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் மார்கெட் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
    • வரக்கூடிய நாட்களில் மெல்ல மெல்ல பூ விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    போரூர்:

    கோயம்பேடு, பூ மார்கெட்டுக்கு ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், திருவண்ணாமலை, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 60-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

    தற்போது புரட்டாசி மாதம் என்பதால் முகூர்த்தம், விஷேச நாட்கள், திருவிழாக்கள் ஏதும் இல்லை. இதனால் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது மேலும் மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் தினசரி 20முதல்30டன் அளவிலான சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்து வீணாகி குப்பையில் கொட்டப்படுகிறது இதனால் பூ வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து பூ மொத்த வியாபாரி மூக்கையா கூறியதாவது:

    புரட்டாசி தொடங்கியது முதலே கடந்த 20நாட்களாக மார்கெட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் மார்கெட் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் பூக்கள் தேவை குறைந்து உள்ள நிலையில் கோயம்பேடு சந்தைக்கு வரும் பூக்கள் வரத்து வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் அதை வாங்கி செல்ல வியாபாரிகள் யாரும் வரவில்லை.

    இதனால் அதிகளவிலான பூக்கள் தேக்கமடைந்து குப்பையில் வீசபடுகிறது. வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) அமாவாசை மறுநாள் நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது அதன்பிறகு ஆயுதபூஜை வர உள்ளது. எனவே வரக்கூடிய நாட்களில் மெல்ல மெல்ல பூ விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    • பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்
    • திருமணம் மற்றும் கோவில் விசேஷங்கள் இல்லாததால் விலை சரிந்தது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம், நொய்யல் மரவா பாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம் , ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை, ரோஜா, செவ்வந்தி, சம்பங்கி சம்பங்கி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை பயிர் செய்துள்ளனர். இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் கோவிலுக்கு வரும் விவசாயிகளுக்கும் அருகாமையில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வேலாயுதம்பாளையம் ,நொய்யல், புன்னம் சத்திரம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, என். புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.650- க்கும், சம்பங்கி கிலோ ரூ.180- க்கும், அரளி கிலோ ரூ.180- க்கும், ரோஜா கிலோ ரூ.260- க்கும், முல்லைப் பூ ரூ.550- க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் விற்பனையானது . நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.380-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70- க்கும், அரளி கிலோ ரூ.120- க்கும், ரோஜா கிலோ ரூ.200- க்கும்,முல்லைப் பூ கிலோ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் விற்பனையானது. திருமணம் மற்றும் கோவில் விசேஷ நாட்கள் இல்லாததால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது . இதனால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • அரியலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம், சூரியகாந்தி, வேப்பங்கொட்டை ஏலம் நடைபெற்றது
    • ரூ.1.42 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது

    அரியலூர்,

    அரியலூர் ரயில் நிலையம் அருகேயுள்ள ஒழங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் மக்காச்சோளம், சூரியகாந்தி, வேப்பங்கொட்டை ஆகிய பொருள்கள் திங்கள்கிழமை ஏலம் போனது.அரியலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், திங்கள்கிழமை மறைமுக ஏலத்துக்கு வந்த 5 விவசாயிகளுடைய 3,102 கிலோ மக்காச்சோளம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.22.91}க்கும் குறைந்த பட்சமாக ரூ.22.81க்கும் ஏலம் கேட்கப்பட்டு மொத்தம் ரூ ரூ.70,907 விலைபோனது.அதனை தொடர்ந்து 2 விவசாயிகளுடைய 1,155 கிலோ சூரியகாந்தி அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.40.21}க்கும், குறைந்தபட்சமாக ரூ.32.09}க்கும் ஏலம் கேட்கப்பட்டு மொத்தம் ரூ.41,782}க்கு விலைபோனது .இதே போல் விவசாயி ஒருவருடைய 439 கிலோ வேப்ப வத்தல் கிலோ ஒன்றுக்கு ரூ.48.42 கேட்கப்பட்டு ரூ.21,256 விலைபோனது. மேலும் ஒரு விவசாயினுடைய 72 கிலோ வேப்பங்கொட்டை கிலோ ஒன்றுக்கு 120.2 விலை கேட்கப்பட்டு 8,654}க்கு விலைக்கு போனது. ஆக மொத்தம் ரூ.1,42,599க்கு வர்த்தகம் நடைபெற்றது.

    • கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
    • மொத்தம் 432 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது

    திருப்பூர்

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்து முறையிட்டனர்.

    மொத்தம் 432 மனுக்கள் பெறப்பட்டன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.

    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பொங்கலூர் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பால் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில் நிதிக்கான ரூ.10 லட்சம் காசோலையை கலெக்டர் வழங்கினார்.

    • பனியன் ஆடை வாங்க வேண்டும் என்றாலே காதர்பேட்டை நம்பிக்கையான இடமாகத் தெரிகிறது.
    • வியாபாரிகள் பனியன் வியாபாரத்தை துவக்க வசதியாக, தற்காலிக கடைகள் அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.

     திருப்பூர்:

    திருப்பூரை தேடி வரும் வெளி மாநிலத்தினர், வெளி மாவட்ட மக்கள் பனியன் ஆடை வாங்க வேண்டும் என்றாலே காதர்பேட்டை நம்பிக்கையான இடமாகத் தெரிகிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடம் வர்த்தகம் செய்யும் விற்பனையாளர் என 1,500 கடைகள் மூலம் இங்கு மொத்த வர்த்தகம் நடைபெறுகிறது. அதே சமயம் சில்லரை விற்பனையாளர் குறைவு. ரோட்டோரம் இருந்த வியாபாரிகள் ஒருங்கிணைந்து பனியன் பஜார் அமைத்து, சில்லரை வியாபாரம் செய்து வந்தனர். அங்கு நடந்த தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிரையாயின. மீண்டும் ஒருங்கிணைந்த பனியன் பஜார் உருவாகுமா என்ற கேள்விக்குறி எழுந்தது.

    பனியன் வியாபாரிகளின் கோரிக்கைப்படி நிரந்தரமான கடை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இதன் எதிரொலியாக குறு, சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பனியன் வர்த்தகத்தை வளர்க்கவும் வசதியாக மாநகராட்சி நிர்வாகம் அதற்கான ஆயத்த பணிகளை துவக்கியுள்ளது. பனியன் விற்பனை கடைகள், ெரயில் நிலையம் அருகாமையில் இருந்தால் மட்டுமே வெளி மாவட்ட மக்களும், வியாபாரிகளும் கொள்முதல் செய்ய வசதியாக இருக்கும்.

    பனியன் வியாபாரிகளின் 20 ஆண்டு கோரிக்கை நிறைவேறும் வகையில் காதர்பேட்டை பகுதியில் நிரந்தர கடைகள் அமைக்க உத்தேச திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடைகளை இழந்து நிர்கதியாய் நிற்கும் வியாபாரிகளுக்கு, தற்காலிகமாக கடைகளை அமைத்து கொடுக்கும் பணியும் வரும் வாரங்களில் துவங்குமென நம்பிக்கை பிறந்துள்ளது.

    மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தை தேர்வு செய்து பார்க்கிங் வசதியுடன் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, வியாபாரிகள் பனியன் வியாபாரத்தை துவக்க வசதியாக, தற்காலிக கடைகள் அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. போக்குவரத்து குறைவான, அகலமான ரோட்டின் ஒரு பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

    • கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழ்நாடு திரும்பிய தமிழர்களில், தொழில் தொடங்க விரும்பு வோரை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசால் புதிய திட்டம் செயல்படுத்தப்ப டுகிறது.
    • றைந்தபட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சியும், வேலை வாய்ப்பு விசா வுடன் 2 ஆண்டு களு க்கு குறையா மல் வெளி நாட்டில் வேலை பார்த்திருக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழ்நாடு திரும்பிய தமிழர்களில், தொழில் தொடங்க விரும்பு வோரை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசால் புதிய திட்டம் செயல்படுத்தப்ப டுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் பயன டைய விண்ணப்பிப்போர், பொதுபிரிவினர் வயது 18 முதல் 45 வரையிலும், பெண்கள் எஸ்.சி, எஸ்.டி, பி.சி, எம்.பி.சி, சிறு பான்மையினர் திரு நங்கை கள், மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 55 வயது வரையிலும், குறைந்தபட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சியும், வேலை வாய்ப்பு விசா வுடன் 2 ஆண்டு களு க்கு குறையா மல் வெளி நாட்டில் வேலை பார்த்திருக்க வேண்டும்.

    1.1.2020 அல்லது அதற்கு பிறகு வெளி நாட்டிலிருந்து தமிழ்நாடு திருப்பி யவராக இருத்தல் வேண்டும். தொழில் தொடங்கு வோருக்கு அதிகபட்ச திட்ட செலவு உற்பத்தி துறைக்கு ரூ.15 லட்சமும், அதிகபட்ச திட்ட செலவு சேவை மற்றும் வணிக துறைக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும்.

    தொழில் தொடங்கு வோரின் பங்களிப்பாக பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதமும், அரசின் மானியத் தொகை திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் என அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.

    விண்ணப்பிப்போர் பாஸ்போர்ட், விசா நகல், கல்விச் சான்று, இருப்பிடச் சான்று, சாதிசான்று, மாற்றுத்திறனாளி களுக்கான சான்று ஆகிய வற்றின் நகல்கள் மற்றும் திட்ட விபரங்களுடன் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தொழில் மையங்களில் அல்லது தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் இணையதளம் மூலமாக சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • ராஜபாளையத்தில் சாலையோர சிறு வியாபாரிகள்-தொழிலாளர்கள் சங்க 13-ம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது.
    • உணவு பாதுகாப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் விளக்கவுரையாற்றினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கத்தில் விருதுநகர் மாவட்ட சாலையோர சிறுவியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது.

    தமிழ்நாடு சாலையோர வியாபார தொழிலாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் மகேஷ்வரன் தலைமை தாங்கி பேசினார். தலைவர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். சங்க பொதுசெயலாளர் கணேசன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில், ராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசுகையில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் திட்டங்களை ராஜபாளையம் நகராட்சிக்கு கொண்டு வந்து சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்து பேசினார். உணவு பாதுகாப்பு பற்றி உணவு பாதுகாப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் விளக்கவுரையாற்றினார்.

    தமிழ் மாநில சிறு வணிகம் மற்றும் தள்ளுவண்டி சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க மாவட்ட துணைத்தலைவர் சுந்தர் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை சங்க பொதுசெயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி, அந்த ரப்பட்டி, கணக்கம்பட்டி, தேசியமங்கலம் ஆகிய இடங்களில் விவசாயிகள் விளை நிலங்களில் பரவலாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர்.தற்போது மாசி மாதம் அறுவடை சீசன் துவங்கப் பட்டுள்ளது. மேலும், கிழங்கு செடிகளில் வளர்ச்சி அடைந்ததால் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிவராத்திரி விழாவை முன்னிட்டு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு தேவை என்பதால் விவசாயிகள் அறுவடை செய்து உள்ளூர் காய்கறிகள் விற்கும் கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விவசாயிகள் மகசூல் செய்துள்ள சர்க்கரைவள்ளி கிழங்கை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    தொழில் துறையில் ஈடுபடும் பெண்கள் ஆடை, அணிகலன்கள் மற்றும் தோற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தன்னம்பிக்கை நிறைந்த உங்கள் தோற்றமே மேலும் பல வெற்றிகளை பெற்றுத்தரும்.
    உடுத்தும் முறை:

    உங்கள் தோற்றமே உங்களது அடையாளம். வேலைச் சூழலுக்கு ஏற்றவாறு நீங்கள் உடைகள் உடுத்தும் விதமும் இருக்க வேண்டும். முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் உங் களிடம் மதிப்பை காட்டும் வகையில், நீங்கள் அணியும் ஆடைகள் இருக்க வேண்டும். உங்களை சந்திப்பவர்கள், உங்கள் கண்களை பார்த்து பேசும் வகையில், உங்கள் தோற்றம் மரியாதைக்கு உரியதாக இருப்பது சிறந்தது.

    வாசனை திரவியங்கள் உபயோகித்தல்:

    அடர்த்தியான வாசனை தரும் திரவியங்களை உபயோகிப்பதை தவிர்க்கவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அவற்றை பிடித்திருந்தாலும், தொழில் முறை இடங்களில் பயன்படுத்துவதற்கு அவை ஏற்றது அல்ல. குழுவுடன் சந்திப்பில் ஈடுபடும்போது அடர்த்தியான வாசனை திரவியங்கள் சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தலாம். சிலருக்கு அவை ஆஸ்துமா பிரச்சினையை அதிகரிக்கலாம். சந்திப்பு நிகழும் அறை முழுவதும் அந்தத் திரவியத்தின் வாசனையை பரப்பி விடலாம்.

    விரல் நகங்கள் மற்றும் கைகள்: பெரும்பாலான பெண்கள் பேசும்போது கைகளின் அசைவினை அடிக்கடி பயன்படுத்துவார்கள். அவ்வாறான தருணங்களில் கைகள் கவனம் ஈர்க்கும் புள்ளியாக மாறும். எனவே கைகள் மற்றும் நகங்கள் தொழில்முறை தோற்றத்துடன் இருப்பது அவசியம். நகங்கள் சுத்தமாக பராமரிக்கப்பட்டும், அளவாக வெட்டப்பட்டும் இருக்க வேண்டும். கண்களைப் பறிப்பது போன்ற 'பளிச்' வண்ண நகப்பூச்சினைத் தவிர்க்க வேண்டும்.

    சிகை அலங்காரம்: தலைமுடி சுத்தமாகவும், நன்றாக படியும்படி வாரப்பட்ட நிலையிலும் இருக்க வேண்டும். கவனத்தை ஈர்க்கும்படியான வண்ணங்களைக் கொண்ட நிறப்பூச்சுகளை தவிர்க்க வேண்டும். அதிகமாக வாசனை வீசக்கூடிய எண்ணெய் மற்றும் ஜெல்களை பயன்படுத்தக்கூடாது.

    நகைகள்: சத்தம் எழுப்பக்கூடிய உலோக நகைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். பெரிய மற்றும் ஆடம்பரமான நகைகளுக்குப் பதிலாக, சிறிய அளவிலான காதணிகளை அணியலாம். அவை காது மடலுக்கு மேல் இருக்க வேண்டும். மெல்லிய கழுத்து சங்கிலி அணியலாம். கைகளில் தரமான கைக்கடிகாரம் அணிவது தோற்றத்தை மேம்படுத்தும்.

    ஒப்பனை: எளிமையாகவும், பகல் நேரத்திற்கு ஏற்றதாகவும் ஒப்பனை செய்வது நல்லது. முழுவதுமாக ஒப்பனை செய்யாமல் இருப்பதும், அதிகப்படியாக ஒப்பனை செய்வதும் தவிர்க்கக் கூடியதாகும்.
    இன்றைய நிலையில் சுயமாகத் தொழில் தொடங்குவதற்கு பெண்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. சுயதொழில் தொடங்குவதற்கு முன்பு சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவற்றை தெரிந்து கொள்வோமா..?
    இன்றைய நிலையில் சுயமாகத் தொழில் தொடங்குவதற்கு மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கல்வித் தகுதியை விட ஆர்வம், தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணம், எவ்வித பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் துணிவு ஆகியவையே சுயதொழில் தொடங்க முக்கியம். அதனால் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள் முதல் முதுகலைப் பட்டம் படித்தவர்கள் வரை யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம். தொழில்முனைவோர் ஆகலாம். இருப்பினும் சுயதொழில் தொடங்குவதற்கு முன்பு சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவற்றை தெரிந்து கொள்வோமா..?

    முன்னேற்பாடு

    சுய தொழில் தொடங்கும்போது தொடக்க காலத்தில் லாபம் உடனடியாக கிடைக்கும் என்று கூற இயலாது. சில தடைகள் மற்றும் கஷ்டங்களை தொழில்முனைவோர்கள் எதிர்கொண்டாக வேண்டும். அப்போது, சுயதொழில் மூலம் வரும் வருமானத்தில் குடும்ப வாழ்க்கையை நடத்துவது இயலாத காரியமாகி விடும். அதனால், சுயதொழில் தொடங்குகிறோம் என்று செய்யும் வேலையை விட்டுவிடாது, அதில் இருந்து கொண்டே தொழிலை தொடங்க வேண்டும். தொழில் ஓரளவுக்கு முன்னேறி விட்டது, லாபகரமானதாக தொழில் நடைபெறுகிறது என்பதை உறுதி செய்த பின்னரே, வேலையை விட வேண்டும்.

    திட்டமிடுதல் மற்றும் பயிற்சி சுய தொழில்

    தொடங்க முடிவு செய்யும் இளைஞர்கள், முக்கியமாக இரு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். தொழிலை நடத்த சிறப்பான திட்டமிடுதல், மற்றொன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட துறை சம்பந்தப்பட்ட நுணுக்கங்களையும், இப்போதைய தொழில் நுட்பங்களையும் தெரிந்து கொள்ள முறையாக பயிற்சி எடுக்க வேண்டும். எனினும், திட்டமிடுதலில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் சிலர், அதை செயல்படுத்துவதில் தோல்வி அடைகின்றனர். அத்தகைய இளைஞர்கள், அனுபவசாலிகளின் வழிகாட்டுதல்களைப் பெற்று, தொழில் குறித்த தெளிவை பெற்ற பின்னரே, தொழிலில் களம் இறங்க வேண்டும். சுய தொழில் தொடங்கும் தொழில்முனைவோர்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சித் திட்டங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவற்றில் பங்கேற்று இளைஞர்கள் தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.

    முதலீடு

    குடும்பப் பின்னணி செல்வச் செழிப்புடையதாக இல்லா விட்டாலும், தொழில் தொடங்குவதற்காக கடனுதவிகளை அரசு வழங்கி வருகிறது. மேலும், தனி நபரிடம் இருந்து கடன் பெறுவதை விட, அரசிடம் இருந்து கடன் பெறுவது பாதுகாப்பானது. அதனால், முதலீடு குறித்த கவலையை விடுத்து தன்னம்பிக்கையுடன் தொழில் தொடங்கலாம். ஒருவரால் மட்டுமே முதலீடு செய்வது கடினம் என்பதால், தொழில் பெருகப் பெருக அதற்கேற்றவாறு முதலீட்டாளர்களை ஈர்க்கலாம்.

    சக பணியாளர்கள்

    நாம் திறமையானவர்கள் என்ற நம்பிக்கை நமக்கு அதிக அளவில் இருக்கும். எனினும், அனைத்து திறமைகளும் நம் ஒருவரிடம் மட்டும் இருக்காது. அதனால், சுயதொழில் தொடங்கும்போது, தொழில் கணக்கை நிர்வகிக்க பொருத்தமான கணக்காளரை நியமிக்கலாம். அதன் மூலம், தொழிலில் இருக்கும் வீண் செலவுகளை குறைக்கலாம். விற்பனைப் பிரிவை வலுப்படுத்தும் வகையில், மேலாளரை நியமித்தால்தான் தொழில் லாபகரமானதாக மாறும். அதுபோல, மற்ற பிரிவுகளுக்கும் தகுந்த நிபுணர்களை நியமிக்க வேண்டும்.

    ஆலோசனைகள்

    தொழில் தொடங்குவது தொடர்பாக மூத்த தொழில்முனைவோர்களிடத்தில் ஆலோசனைகளைக் கேட்டு பெறுவது மட்டுமின்றி, தொழில்முனைவோர் ஆலோசனை நிறுவனங்களை அணுகலாம். தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் உதவியாக இருக்கும். வரி விலக்குகளுடன் பணத்தை எவ்வாறு சேமிப்பது, வாடிக்கையாளர்களை எவ்வாறு கவர்வது உள்ளிட்ட நுணுக்கங்களை அனுபவசாலிகளிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.

    மதிப்பீடு

    நமது தொழிலைப் பலப்படுத்த மேற்கண்ட அனைத்தும் இருந்தாலும், தொழில் நிலை குறித்து அவ்வப்போது மதிப்பீடு செய்ய வேண்டியது மிக முக்கியம். தொழிலில் வரும் லாப, நஷ்டங்களைக் கணக்கிட்டு அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், சுயதொழிலில் வெற்றிகரமாகப் பயணிக்க முடியும்.
    ×