செய்திகள்

கேரளாவில் வெள்ள பாதிப்பு: ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2018-08-20 23:07 GMT   |   Update On 2018-08-20 23:07 GMT
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* கொல்லம்-தாம்பரம் சிறப்பு ரெயில்(வண்டி எண்:06028), கொல்லத்தில் இருந்து இன்று(செவ்வாய்க்கிழமை) புறப்படும் ரெயில், கொல்லம்-செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம் முன்பதிவற்ற சிறப்பு ரெயில்(06049), இன்று மாலை 5.30 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.40 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News