செய்திகள்

பாரத் ரத்னா வாஜ்பாயின் மறைவுக்கு தமிழக ஆளுநர், முதல்வர் இரங்கல்

Published On 2018-08-16 13:33 GMT   |   Update On 2018-08-16 13:33 GMT
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #RIPVajpayee #BanwarilalPurohit #TN #CMPalaniswami
சென்னை:

பாஜகவின் பிதாமகன் என அழைக்கப்படும், வாஜ்பாய் வாழும்போதே பாரத ரத்னா வாங்கிய தனி பெரும் சிறப்புக்கு சொந்தக்காரர். இவர் தனது 93-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனயில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்தார்.

வயது மூப்பின் காரணமாக சிகிச்சைகள் ஏதும் பலனளிக்காமல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று (16.8.18) மாலை காலமானார். இவரது இறப்புக்கு பல்வேறு தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த வாஜ்பாயின் மறைவு வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.



இதேபோல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு இந்தியாவிற்கே பேரிழப்பு என தெரிவித்துள்ளார். இவர் உட்பட, டிடிவி தினகரன் போன்ற அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

வலிமையான தலைவரையும், நல்ல மனிதரையும் நாடு இழந்துவிட்டதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #BanwarilalPurohit #TN #CMPalaniswami
Tags:    

Similar News