செய்திகள்
மோகனூர் அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் - டிரைவர் கைது
மோகனூர் அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மோகனூர்:
மோகனூர் அருகே உள்ள எல்லைக்காட்டு புதூர் பகுதியில் மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை சோதனை செய்தனர்.
இதில் லாரிகளில் மணல் அள்ளி கடத்துவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து டாரஸ் லாரி ஒன்றும், டிப்பர் லாரி ஒன்றும் பறிமுதல் செய்யபட்டது. வட்டூர் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டாரஸ் லாரி டிரைவர் பழனிசாமி (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய ஓமலூர் அருகே உள்ள செட்டிபட்டியைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் ரவி, வட்டூர் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த டிரைவர் ராஜா, மணல் அள்ளிய எல்லைக்காட்டுபுதுரைச் சேர்ந்த குப்பன் மகன் முருகன் (43), லாரி உரிமையாளர் ஓமலூர் செட்டிபட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி கஸ்தூரி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட லாரி டிரைவர் பழனிசாமி நாமக்கல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
மோகனூர் அருகே உள்ள எல்லைக்காட்டு புதூர் பகுதியில் மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை சோதனை செய்தனர்.
இதில் லாரிகளில் மணல் அள்ளி கடத்துவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து டாரஸ் லாரி ஒன்றும், டிப்பர் லாரி ஒன்றும் பறிமுதல் செய்யபட்டது. வட்டூர் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டாரஸ் லாரி டிரைவர் பழனிசாமி (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய ஓமலூர் அருகே உள்ள செட்டிபட்டியைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் ரவி, வட்டூர் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த டிரைவர் ராஜா, மணல் அள்ளிய எல்லைக்காட்டுபுதுரைச் சேர்ந்த குப்பன் மகன் முருகன் (43), லாரி உரிமையாளர் ஓமலூர் செட்டிபட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி கஸ்தூரி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட லாரி டிரைவர் பழனிசாமி நாமக்கல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.