செய்திகள்

நாசரேத்-சாத்தான்குளத்தில் கருணாநிதிக்கு தி.மு.க.வினர் அஞ்சலி

Published On 2018-08-09 13:58 GMT   |   Update On 2018-08-09 13:58 GMT
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி நாசரேத் பகுதியில் திமுகவினர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். #karunanidhideath #dmk
தூத்துக்குடி:

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாசரேத் பகுதியில் நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ரவி செல்வகுமார், மாவட்ட பிரதிநிதி சாமுவேல், அலெக்ஸ், கிளைச் செயலாளர் கலையரசு ஆகியோர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

சாத்தான்குளம் வாசகசாலை பஜாரில் தி.மு.க. நகர செயலாளர் மகாஇளங்கோ, ஒன்றிய அவைத்தலைவர் சவுந்திரபாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மகாராஜன் ஆகியோர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  

இதையடுத்து மாலையில் அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. #karunanidhideath #dmk
Tags:    

Similar News