செய்திகள்

திருச்சி கோரிமேட்டில் இளம்பெண் மாயம்- கடத்தப்பட்டாரா? என விசாரணை

Published On 2018-08-09 13:50 GMT   |   Update On 2018-08-09 13:50 GMT
திருச்சியில் மாயமான இளம்பெண் கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி:

திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் அமைந்துள்ள கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30). இவர் ரெயில்வே கேண்டீனில் ஊழியராக  வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அலமேலு (27). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி காலை மனைவியிடம்  கூறிவிட்டு அவரது கணவர் செந்தில்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். பிற்பகல் 3 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் அவரது மனைவியை காணவில்லை.

அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே அருகில் வசிப்பவர்கள் அலமேலு மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றதாகவும், ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இதற்கிடையே மாயமான தனது மனைவியை கண்டு பிடித்து தருமாறு  அலமேலுவின் கணவர் செந்தில்குமார் கொடுத்த  புகாரின்  பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அலமேலுவை தேடி வருகிறார்கள். காணாமல் போன அலமேலு அன்றைய தினம் ஆரஞ்சு நிற புடவை அணிந்திருந்ததாகவும், அவர் சுமார் 5 1/2 அடி உயரம் இருப்பதாகவும், அவரது உதடு வெற்றிலை போட்டு வெடித்த வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும் அடையாளம் கூறியுள்ளார். 

அதன் அடிப்படையில் போலீசார், குடும்ப பிரச்சினையில் அவர் மாயமானாரா? அல்லது யாராவது மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்றார்களா? என விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News