செய்திகள்
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு திடீரென மழை பெய்து குளிர்வித்தது. #Rain
சென்னை:
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு 10 மணிக்கு திடீரென மழை பெய்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் அப்பகுதிகள் குளிர்ந்தன.
சென்னையில் ராயப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, திருவொற்றியூர், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
காலை முதல் வெயில் அடித்த நிலையில் இரவில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.