செய்திகள்

விருதுநகர் அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை

Published On 2018-07-18 18:01 GMT   |   Update On 2018-07-18 18:01 GMT
விருதுநகர் அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்:

விருதுநகர் பாண்டியன்நகரை சேர்ந்தவர் முத்துவேல் என்கிற அஜித்குமார் (வயது 23). மீன் மார்க்கெட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பாண்டீஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவர் விஷம்குடித்து விட்டார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். 
Tags:    

Similar News