செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் வாகன தணிக்கையில் ஒரே நாளில் 640 வழக்குபதிவு

Published On 2018-07-14 17:02 GMT   |   Update On 2018-07-14 17:02 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 640 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் நேற்று இரவு விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்வாமிங் ஆப்ரே‌ஷன் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் போலீஸ்சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலும், விழுப்புரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலும் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் நேற்று இரவு மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மேலும் வாகன சோதனை மற்றும் பழைய குற்றவாளிகளை கண்காணித்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். இந்த திடீர் வாகன சோதனையில் 1430 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 36 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யக்கோரி ஆர்.டி.ஓ. வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

மேலும் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டிய 571 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மொத்தம் 640 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 89 தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜூகளில் போலீசார் சோதனை செய்தனர்.

Tags:    

Similar News