என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விழுப்புரம் மாவட்டத்தில் போலீசார் வாகன தணிக்கை"
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் நேற்று இரவு விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்வாமிங் ஆப்ரேஷன் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் போலீஸ்சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலும், விழுப்புரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலும் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் நேற்று இரவு மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மேலும் வாகன சோதனை மற்றும் பழைய குற்றவாளிகளை கண்காணித்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். இந்த திடீர் வாகன சோதனையில் 1430 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 36 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யக்கோரி ஆர்.டி.ஓ. வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
மேலும் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டிய 571 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மொத்தம் 640 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 89 தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜூகளில் போலீசார் சோதனை செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்