செய்திகள்

கோயம்பேட்டில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற 2 ரவுடிகள் கைது

Published On 2018-07-06 09:55 GMT   |   Update On 2018-07-06 09:55 GMT
சென்னை கோயம்பேட்டில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் இரண்டு பட்டா கத்தியையும் பறிமுதல் செய்தனர்.
போரூர்:

கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோயம்பேடு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இந்த நிலையில் மேட்டுக்குப்பம் தேவி கருமாரி அம்மன் நகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று மாலை போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர் அங்கு பதுக்கி வைத்திருந்த 1 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இரண்டு பட்டா கத்தியையும் அங்கிருந்து கைப்பற்றிய போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சித்தாலப்பாக்கம் ஜெயா நகரைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்கிற மூர்த்தி, கொளத்தூர் எம்.ஜி.ஆர். நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் ஆகிய இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

போலீசார் விசாரணையில் கடந்த இரண்டு மாதங்களாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கஞ்சா விற்பனை செய்து வந்ததும் சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருவர் மீதும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. #Tamilnews
Tags:    

Similar News