செய்திகள்
தொட்டியம் அருகே வாலிபர் எரித்து கொலை
தொட்டியம் திருநாராயணபுரம் காவிரி கரையில் அடையாளம் தெரியாத ஆண் எரித்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொட்டியம்:
திருச்சி மாவட்டம்தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரம் காவிரியாற்று படுகைக்கு சென்ற சிலர் அப்பகுதியில் எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக தொட்டியம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்டவர் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பச்சைநிறபனியனும், வெள்ளை வேட்டியும் பாதி எரிந்த நிலையில் கிடந்தார். கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரை யாரும் கடத்தி வந்து கொலை செய்து எரித்தார்களா? அல்லது வேறு எங்கும் கொலை செய்து இங்கு வந்து எரித்தார்களா? அல்லது மது போதை தகராறில் எரித்து கொல்லப்பட்டார? என பல கோணங்களில் தொட்டியம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியிலிருந்து மோப்ப நாய் அர்ஜீன் வரவழைக்கப்பட்டது. அது சடலம் கிடந்த இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரம் வரை சென்று காட்டுப்புத்தூர் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தம் முன்பு நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இந்த சம்பவம் தொட்டியம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.