செய்திகள்

மாடத்திலே கன்னி மாடத்திலே - சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்திய சுவாரஸ்ய விவாதம்

Published On 2018-07-02 11:34 GMT   |   Update On 2018-07-02 11:34 GMT
சட்டசபையில் இன்று கூட்டுறவுத்துறை மீதான விவாதத்தில் செல்லூர் ராஜூ சப்தமாக உரையை வாசிக்க, அதனை துரை முருகன் கிண்டல் செய்ய, அதற்கு ஜெயக்குமார் அளித்த பதில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. #TNAssembly
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று கூட்டுறவுத்துறை மீதான விவாதம் நடந்தது. இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தனது உரையை சப்தமாக வாசித்தார். இதனை கிண்டலடிக்கும் விதமாக பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரை முருகன், ‘மாடத்தில் செல்லூர் ராஜூவின் மனைவி, இவரது பேச்சை கேட்டு வீட்டில் பூனையாகவும் இங்கு புலி போல் இருப்பதாகவும் கூறினார்’ என பேசினார்.

இதனை அடுத்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “மாடத்தில் உள்ள அமைச்சரின் துணைவியாருக்கு அவர் மேலுள்ள மரியாதையை பார்த்தால், மாடத்திலே கன்னி மாடத்திலே என பாட தோன்றுகிறது. அமைச்சர் செல்லூர் ராஜூ உதாரண புருசராகவும், மனைவியே கண் கண்ட தெய்வமாகவும், அனைவருக்கும் உதாரணமாகவும் உள்ளார்’ என கூறினார். இதனால், அவையில் சில நிமிடங்கள் சிரிப்பலை ஏற்பட்டது. 
Tags:    

Similar News