செய்திகள்

கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் 95 பேர் ரத்ததானம்

Published On 2018-06-12 17:21 GMT   |   Update On 2018-06-12 17:21 GMT
தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
நாமக்கல்:

தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தொடங்கி வைத்தார்.

மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் கோகுல் கிருபா சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் தி.மு.க.வினர் 95 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ராஜேஸ்பாபு, துணை அமைப்பாளர்கள் மதிவேந்தன், பார்த்திபன், சுதா மற்றும் சிவக்குமார், நகர பொறுப்பாளர் மணிமாறன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News