செய்திகள்

பல்லடம் அருகே கார் மோதி ஒடிசா தொழிலாளி பலி

Published On 2018-06-12 09:45 GMT   |   Update On 2018-06-12 09:45 GMT
பல்லடம் அருகே கார் மோதி ஒடிசா தொழிலாளி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் லிங்கராஜ் பிரதாப். இவரது மகன் பிரதாப் (22). இவர் கடந்த 2 வருடங்களாக பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் தங்கி அங்குள்ள தனியார் நூல் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை வேலை முடிந்து கடைக்கு செல்வதற்காக வந்தார். பல்லடம்- தாராபுரம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் பிரதாப் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வரும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து காமநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News