செய்திகள்
திருச்செந்தூரில் மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலி
திருச்செந்தூரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
குலசேகரப்பட்டினம் அண்ணா சிலை பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது80). இவர் திருச்செந்தூர் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பணியில் இருந்த இவருக்கு அவரது மனைவி பொன்னம்மாள் சாப்பாடு கொண்டு வந்தார்.
அதனை வாங்கி கொண்டு நடந்து வந்த அவர் மீது திருச்செந்தூரில் இருந்து குலசேகரப்பட்டனம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பேச்சிமுத்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
குலசேகரப்பட்டினம் அண்ணா சிலை பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது80). இவர் திருச்செந்தூர் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பணியில் இருந்த இவருக்கு அவரது மனைவி பொன்னம்மாள் சாப்பாடு கொண்டு வந்தார்.
அதனை வாங்கி கொண்டு நடந்து வந்த அவர் மீது திருச்செந்தூரில் இருந்து குலசேகரப்பட்டனம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பேச்சிமுத்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews