செய்திகள்
சங்கரன்கோவில் அருகே பாம்பு கடித்து விவசாயி பலி
சங்கரன்கோவில் அருகே பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சின்னகோவிலான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). விவசாயி. இவரது மனைவி அய்யம்மாள். இவருக்கு சொந்தமான இடம் ஊரின் எல்லையில் உள்ளது. சம்பவத்தன்று இவர் வயலில் போட்டிருந்த சோளத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது சோளத்திற்குள் மறைந்திருந்த விரியன்பாம்பு இவரை கடித்துள்ளது. உடனே வீட்டிற்கு வந்தவரை உறவினர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் பற்றி சின்னகோவிலான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கரன்கோவில் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). விவசாயி. இவரது மனைவி அய்யம்மாள். இவருக்கு சொந்தமான இடம் ஊரின் எல்லையில் உள்ளது. சம்பவத்தன்று இவர் வயலில் போட்டிருந்த சோளத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது சோளத்திற்குள் மறைந்திருந்த விரியன்பாம்பு இவரை கடித்துள்ளது. உடனே வீட்டிற்கு வந்தவரை உறவினர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் பற்றி சின்னகோவிலான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.