செய்திகள்

புளியமரத்தில் வேன் மோதி சிறுவன் உள்பட 2 பேர் பலி

Published On 2018-05-21 08:11 GMT   |   Update On 2018-05-21 08:11 GMT
ஊட்டிக்கு சுற்றுலா வந்த போது அன்னூர் அருகே புளியமரத்தில் வேன் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
அன்னூர்:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த 12 பேர் ஊட்டிக்கு ஒரு வேனில் சுற்றுலா புறப்பட்டனர். வேனை டிரைவர் ராமதாஸ் ஓட்டி வந்தார்.இந்த வேன் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோவை மாவட்டம் அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் ஜெ.ஜெ.நகரில் வந்து கொண்டிருந்தது.

அப்போது வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் வேனில் இருந்த சீனு என்கிற சீனிவாசன் (24), ரிஷி (11) ஆகியோர் சம்பவ இடத்திலே பலியானார்கள்.

11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு-

ராமதாஸ் (டிரைவர்)சாந்தி (60), பாஸ்கரன் (45), அவரது மனைவி நித்யா (33), லயா என்கிற தேவி (13), வினோத் குமார் (30), காவியா (12), கமல் (8), பிரவின் (29), மகாலட்சுமி (26), பெரியசாமி (31).

விபத்தில் பலியான ரிஷி காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள பாஸ்கரன்- நித்யாவின் மகன் ஆவார்.

டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews
Tags:    

Similar News