செய்திகள்

நிர்மலா தேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

Published On 2018-05-16 10:15 GMT   |   Update On 2018-05-16 10:15 GMT
மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த விவகாரத்தில் கைதாகியுள்ள நிர்மலா தேவி வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #NirmalaDevi
சென்னை:

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேசிய அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி தற்போது கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கவர்னர் அமைத்த விசாரணை அதிகாரி சந்தானம் தனது விசாரணை அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில், சிபிசிஐடி வசமுள்ள இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என ஜிஎஸ் மணியன் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், ஒரு புலனாய்வு அமைப்பின் விசாரணை முடியாத போதே, அது சரியில்லை என எப்படி கூறமுடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். 
Tags:    

Similar News