என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "CBI"
- போலீஸ் நிலையத்தில் எவ்வாறு ‘வயர்லெஸ்’ சத்தங்கள் கேட்குமோ? அதே போன்று தண்டபாணிக்கு போனில் கேட்டது.
- தண்டபாணியை முழுமையாக நம்ப வைத்த அந்த நபர் பின்னர் அதே நபர் தண்டபாணியை “ஸ்கைப் காலில்” பேசசொன்னார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உழவர்கரை பா.ஜனதா மாவட்ட தலைவர் தண்டபாணி. இவர் லாஸ்பேட்டை அவ்வை நகரில் வசித்து வருகிறார். இவர் ஓட்டல் உள்ளிட்ட தொழில்களையும் நடத்தி வருகிறார்.
நேற்று காலை 8.13 மணிக்கு கர்நாடக மாநில பதிவு பெயர் கொண்ட தொலைபேசி எண்ணில் இருந்து தண்டபாணிக்கு போன் வந்தது.
எதிர் முனையில் பேசியவர் நீங்கள் பெட்எக்ஸ் கொரியர் மூலம் அனுப்பிய போதை பொருளை மும்பையில் கைப்பற்றி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. உங்களுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடத்தல் மூலம் நீங்கள் எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்துள்ளீர்கள் என்பது எங்களுக்கு பட்டியல் வந்துள்ளது.
எனவே நாங்கள் சொல்வது நீங்கள் கேட்டால் உங்களை வழக்கில் இருந்து விடுவிப்போம் என பேசினார். இதைக் கேட்ட பா.ஜனதா பிரமுகர் தண்டபாணி அதிர்ச்சியில் உறைந்து போனார்.
எதிர்முனையில் பேசிய நபர் உடனே தண்டபாணியின் செல்போனுக்கு வாட்ஸ்-அப்பில் சி.பி.ஐ. எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது போல் ஒரு கடிதத்தை அனுப்பினார்.
அந்த எப். ஐ. ஆரில் சி.பி.ஐ. எப்படி வழக்கு பதிவு செய்திருக்குமோ அதே போல் இருந்தது.
தொடர்ந்து மற்றொருவர் சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து அதிகாரி பேசுவதாக பேசினார்.
அப்போது போலீஸ் நிலையத்தில் எவ்வாறு 'வயர்லெஸ்' சத்தங்கள் கேட்குமோ? அதே போன்று தண்டபாணிக்கு போனில் கேட்டது. தண்டபாணியை முழுமையாக நம்ப வைத்த அந்த நபர் பின்னர் அதே நபர் தண்டபாணியை "ஸ்கைப் காலில்" பேசசொன்னார்.
எதிரே பேசியவரின் உருவம் ஸ்கைப் காலில் தெரியாததால் சந்தேகம் அடைந்த தண்டபாணி சுதாரித்து பதில் தர ஆரம்பித்தார். அடுத்தடுத்து சுமார் ஒன்றரை மணி நேரம் விடாமல் பேசிய அந்த நபர் தண்டபாணியின் வங்கி கணக்கு எண் அவருடைய பண பரிமாற்றம் உள்ளிட்டவையை கூறி மோசடியில் ஈடுபட முயற்சித்தார்.
பின்னர் சுதாரித்துக்கொண்ட தண்டபாணி போனை துண்டித்து இதுகுறித்து கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரி என பேசிய போலி நபரின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். புதுவையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரமுகர்களை குறி வைத்து அமலாக்கத்துறை அதிகாரி, சி.பி.ஐ. அதிகாரி என கூறி போலி ஆசாமிகள் தொடர்ந்து மிரட்டி வருவதால் பா.ஜனதாவினர் கலக்கத்தில் உள்ளனர்.
ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரி என கூறி கல்யாணசுந்தரம், சிவசங்கர் எம்.எல்.ஏ.விடம் சிக்கிய போலி அமலாக்கத்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஷேக் ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இந்த விவகாரத்தை கொல்கத்தா ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்து வந்தவர் ஷேக் ஷாஜகான்.
இவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்களின் நிலங்களை அபகரித்ததாகவும், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதனால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தை கொல்கத்தா ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. பின்னர் ஷாஜகான் மற்றும் அவரது உதவியாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஷேக் ஷாஜகானுக்கு எதிராக அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.
ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றபோது அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவரை கைது செய்துள்ளதாக மேற்கு வங்காள போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு மேற்கு வங்காள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மாநில போலீசார் முற்றிலும் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள். எனவே வழக்கை சி.பி.ஐ. யிடம் ஒப்படைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும் ஷாஜகானின் காவலையும், வழக்கு தொடர்பான பொருட்களையும் மாலை 4.30 மணிக்குள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கு வங்காள போலீஸ் தலைமை அலுவலகத்திற்குச் சென்று வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி ஷேக் ஷாஜகானை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தினர்.
ஆனால் மேற்கு வங்காள போலீசார் அவரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அதன் தீர்ப்பு வரும் வரை ஷேக் ஷாஜகானை ஒப்படைக்க மாட்டோம் என தெரிவித்தனர். இதனால் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்காள அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அவசர மனுவாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
- 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்தார்.
- இவருடைய பதவி காலத்தில் சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு.
உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சம்மனில் சட்ட விரோதமாக சுரங்கங்களை ஒதுக்கிய வழக்கு தொடர்பாக விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் டெல்லி சென்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வாய்ப்பு இல்லை என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அகிலேஷ் யாதவ் இன்று லக்னோவில் பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர் கட்சி அலுவலகத்தில் இருந்து வேறு எங்கும் செல்லும் திட்டம் தற்போதை வரை இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
சமாஜ்வாடி கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில தலைவர் ராஜ்பால் காஷியப் கூறுகையில் "அகிலேஷ் யாதவ் பிடிஏ (Picchda- பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர்) ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றார்.
சமாஜ்வாடி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி "அகிலேஷ் யாதவ் இன்று எங்கேயும் செல்லமாட்டார். லக்னோவில் நடைபெறும் கட்சி அலுவலக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்" என்றார்.
சம்மன் தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில் "தேர்தல் வரும்போது நோட்டீஸ் வரும் என்பது எனக்குத் தெரியும். ஏன் இந்த பதட்டம்?. நீங்கள் (பா.ஜனதா) கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான பணிகளை செய்திருந்தால் ஏன் பதட்டம் அடைகிறீர்கள்?" எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக,
உத்தர பிரதேசத்தில் கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்தார். இவருடைய பதவி காலத்தில் சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பொதுப்பணித்துறையினர் சட்ட விரோதமாக சுரங்கத்தை அனுமதித்ததாகவும், சுரங்கம் தோண்டுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்த போதும் சட்ட விரோதமாக உரிமங்களை புதுப்பித்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டன.
இதை தொடர்ந்து, சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் 2016-ம் ஆண்டு ஆரம்ப விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த சி.பி.ஐ., 2012-2013 வரையிலான காலக் கட்டத்தில் மாநில சுரங்கத்துறையை அகிலேஷ் யாதவ் கவனித்து வந்தபோது இந்த முறைகேடு நடந்ததாகவும், ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைகளுக்கு முதல்-மந்திரி அலுவலகம் அனுமதி அளித்ததாகவும் குற்றம் சாட்டியது.
அதனை தொடர்ந்து சுரங்க முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரகலா, சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.சி. ரமேஷ் குமார் மிஸ்ரா உள்ளிட்ட 11 பேர் மீது சி.பி.ஐ. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.
- ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைகளுக்கு முதல்-மந்திரி அலுவலகம் அனுமதி அளித்ததாகவும் குற்றச்சாட்டு.
- ஐந்து ஆண்டுகளுக்கு முன் சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது.
உத்தர பிரதேசத்தில் கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்தார். இவருடைய பதவி காலத்தில் சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பொதுப்பணித்துறையினர் சட்ட விரோதமாக சுரங்கத்தை அனுமதித்ததாகவும், சுரங்கம் தோண்டுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்த போதும் சட்ட விரோதமாக உரிமங்களை புதுப்பித்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டன.
இதை தொடர்ந்து, சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் 2016-ம் ஆண்டு ஆரம்ப விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த சி.பி.ஐ., 2012-2013 வரையிலான காலக் கட்டத்தில் மாநில சுரங்கத்துறையை அகிலேஷ் யாதவ் கவனித்து வந்தபோது இந்த முறைகேடு நடந்ததாகவும், ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைகளுக்கு முதல்-மந்திரி அலுவலகம் அனுமதி அளித்ததாகவும் குற்றம் சாட்டியது.
அதனை தொடர்ந்து சுரங்க முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரகலா, சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.சி. ரமேஷ் குமார் மிஸ்ரா உள்ளிட்ட 11 பேர் மீது சி.பி.ஐ. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
வழக்கு தொடர்பான விசாரணைக்கு அகிலேஷ் யாதவ் இன்று நேரில் ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மத்திய புலனாய்வு அமைப்புகள் சுமார் 30 நிறுவனங்களில் சோதனை நடத்தியுள்ளன.
- சோதனைக்கு பின் பல நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கியிருப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது.
புதுடெல்லி:
காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையை எதிர்கொண்ட பிறகு, பல தனியார் நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கியிருப்பதாக பல்வேறு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இது மத்திய புலனாய்வு அமைப்புகளின் சுதந்திரம், தன்னாட்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. இந்த 3 புலனாய்வு அமைப்புகளில் 2 அமைப்புகள் மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.
பா.ஜ.க. அரசாங்கத்தால் புலனாய்வு அமைப்புகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது முழு தேசத்திற்கும் தெரியும். 2014-ம் ஆண்டிலிருந்து அரசியல்வாதிகளுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்குகள் 4 மடங்கு அதிகரித்துள்ளன. இதில் 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக உள்ளன.
பா.ஜ.க.வுக்கு மொத்தம் ரூ.187.58 கோடி வழங்கிய 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்கள், 2014 முதல் சோதனை நடந்த ஆண்டு வரை பா.ஜ.க.வுக்கு எந்த நன்கொடையும் வழங்கியிருக்கவில்லை. ஆனால் அதன்பிறகு நன்கொடை வழங்கியுள்ளன. ஏற்கனவே நன்கொடை வழங்கி வந்த நிறுவனங்கள், சோதனைக்குப் பிறகு அதிக தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளன.
விசாரணை அமைப்புகளால் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் சட்டவிரோதமானது என நாங்கள் கூறவில்லை. விசாரணையை எதிர்கொண்ட பின் இந்த நிறுவனங்கள் ஏன் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்குகின்றன என்பது விசாரிக்கப்பட வேண்டிய விவகாரம் ஆகும். அமலாக்கத்துறை நடவடிக்கைக்குப் பிறகு அவர்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை அளிப்பது வெறும் தற்செயலானதா?
இந்த விவகாரத்தை நாங்கள் நீதித்துறையிடமும், மக்களிடமும் கொண்டு செல்வோம். இரு இடங்களிலும் நாங்கள் உங்களைத் தோற்கடிப்போம் என தெரிவித்துள்ளார்.
இதேபோல், தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், பா.ஜ.க. தனது நிதி ஆதாரங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அப்படி இல்லையெனில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பின் கீழ் இந்த நன்கொடைகள் குறித்த விசாரணைக்கு உடன்பட வேண்டும் என்றார்.
- கடந்த 2021-ம் ஆண்டு சி.பி.ஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
- சி.பி.ஐ. தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்கள் கேட்டு 9 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
கோவை:
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோக்கள் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 2021-ம் ஆண்டு சி.பி.ஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்தநிலையில் அதில் கூடுதல் ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 30-க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சி.பி.ஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்கள் கேட்டு 9 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்தநிலையில் இன்று 9 பேரும் கோவை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் குற்றவாளிகள் 9 பேர் முன்னிலையிலும் கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு, அடையாளம் காணப்பட்டது.
கடந்த ஒரு வருடமாக வீடியோ கான்பரன்சிங்கில் விசாரணைக்கு 9 பேரும் ஆஜராகி வந்தனர். தற்போது சேலம் ஜெயிலில் உள்ள இவர்கள் ஒரு வருடத்திற்கு பின்பு இன்று கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது
- 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணையச் சேவைகளை தடை செய்வது, இதுதான் உங்களின் ஜனநாயகமா?
விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு, X கணக்குகள் முடக்கம், இதுதான் ஜனநாயகமா: ராகுல்காந்தி ட்வீட்
மோடி அவர்களே..! நீங்கள் ஜனநாயகத்தை கொலை செய்கிறீர்கள் என மக்களுக்கு தெரியும். அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள் என ராகுல்காந்தி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டால், அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது கிடையாது. முன்னாள் ஆளுநர் உண்மையை கூறினால், அவரின் வீட்டிற்கு சி.பி.ஐயை அனுப்புவது. எதிர்க்கட்சியினரின் வங்கிக்கணக்கை முடக்குவது. 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணையச் சேவைகளை தடை செய்வது, இதுதான் உங்களின் ஜனநாயகமா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. சி.ஆர்.பி.எப் வீரர்கள் செல்ல விமானம் கொடுத்திருந்தால் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்திருக்காது என தான் கூறியதற்கு வாயை மூடி அமைதியாக இருக்குமாறு மோடி சொன்னதாக மாலிக் பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக அரசு 2022ம் ஆண்டு அக்டோபரில் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
- விசாரணை ஏப்ரல் 5ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிபிஐ மேல் விசாரணை நடத்தி வருகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த வழக்கில், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுக்கும் வகையில் தமிழக அரசு 2022 அக்டோபரில் பிறப்பித்த அரசாணைக்கு மனுதாரர் தடை விதிக்க வேண்டும் எனவும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
அரசின் பதில் மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை ஏப்ரல் 5ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
- விசாரணை அதிகாரியாக இருந்த திருச்சி டிஎஸ்பி பால்பாண்டி இடமாற்றம் செய்யப்பட்டு தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார்.
- சிபிசிஐடி உயர் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்திய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் உண்மை குற்றவாளி இன்னும் கண்டறியப்படாத நிலையில், இதுவரை 189 நபர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டு, சந்தேகத்தின் பேரில் 5 சிறுவர்கள் உட்பட 35 நபர்களுக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், புதிதாக மேலும் 10 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடந்து வந்தது. இந்த சோதனைக்கு 10 பேரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த மனு மீது நேற்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.
இதற்கிடையே வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த திருச்சி டிஎஸ்பி பால்பாண்டி இடமாற்றம் செய்யப்பட்டு தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வேங்கைவயல் வழக்கு சிபிஐ வசம் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக சிபிசிஐடி உயர் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மறுபடியும் முதலில் இருந்து விசாரணை தொடங்கும் சூழ்நிலையில் சிபிஐ வசம் வழக்கை ஒப்படைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
- சந்தா கோச்சார் ஐசிஐசிஐ தலைமை பொறுப்பிலிருந்து பதவி விலகினார்
- கோச்சார் தம்பதி மற்றும் 6 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது
1979ல், மும்பையில் வேணுகோபால் தூத் என்பவரால் தொடங்கப்பட்டு பன்னாட்டு நிறுவனமாக வளர்ச்சி பெற்றது வீடியோகான் குழுமம் (Videocon group).
2009 ஜூன் மாதத்திலிருந்து 2011 அக்டோபர் காலகட்டம் வரை, வீடியோகான் குழுமத்திற்கு, ஐசிஐசிஐ தனியார் வங்கியின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான சந்தா கோச்சார் (Chanda Kochhar) , தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, நிறுவனர் வேணுகோபால் தூத்திற்கு ரூ.3,250 கோடி கடனாக வழங்கியதாகவும், தகுதியற்ற கடன் வழங்கியதற்கு ஈடாக சந்தாவின் கணவர் தீபக் கோச்சாருக்கு வீடியோகான் லஞ்சம் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதை தொடர்ந்து சந்தா கோச்சார் வங்கியின் உயர் பதவியிலிருந்து விலகினார்.
இதை விசாரித்த மத்திய புலனாய்வு துறை (CBI) 2023 ஏப்ரல் மாதம், சந்தா கோச்சார், அவர் கணவர் தீபக் கோச்சார், மற்றும் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்தது.
2022 டிசம்பர் 23 அன்று சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டனர். 3 நாட்கள் கடந்து வேணுகோபால் தூத் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.
இந்நிலையில், இன்று சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட போது விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என நம்ப இடமிருப்பதாகவும், அவரது கைது சட்டவிரோதம் என்றும் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோச்சார் தம்பதியினருக்கு இடைக்கால ஜாமீனையும் நீதிமன்றம் வழங்கியது.
- வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தல்.
- நான் ராமாயணம், குரான், பைபிள், குரு கிரந்த சாகிப் போன்றவற்றைப் பின்பற்றுகிறேன்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சிக்கு வாக்களிக்காவிட்டால், மத்திய புலனாய்வு அமைப்புகளை தங்கள் வீடுகளுக்கு அனுப்புவோம் என்று பாஜக மக்களை அச்சுறுத்துவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், குடியுரிமை (திருத்தம்) சட்டம் அல்லது சிஏஏவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இருப்பதை உறுதி செய்யுமாறு கூச் பெஹாரில் உள்ள உள்ளூர் மக்களுக்கு, குறிப்பாக ராஜ்பன்ஷிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமை அறிவுறுத்தியது.
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில்," பாஜக, மத்திய அமைப்புகளை தேர்தலுக்கு பயன்படுத்துகிறது. பா.ஜ.க கட்சிக்கு வாக்களிக்காவிட்டால், அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஆகியோரை தங்கள் வீட்டிற்கு அனுப்புவோம் என்று தொலைபேசியில் மக்களை மிரட்டுகிறது.
நான் ராமாயணம், குரான், பைபிள், குரு கிரந்த சாகிப் போன்றவற்றைப் பின்பற்றுகிறேன். வெளியில் இருந்து கொண்டு வரும் உணவை சாப்பிடுவதற்காக ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று நாடகம் ஆடுவதில்லை" என்றார்.
- வரி வசூலில் முறைகேடு நடப்பதாக சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு புகார் வந்தது.
- விசாரணையையொட்டி வணிகவரித்துறை அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.
புதுச்சேரி:
புதுவை 100 அடி சாலையில் வணிக வரித்துறை அலுவலகம் உள்ளது.
இங்குள்ள அதிகாரிகள் புதுவையில் உள்ள தொழிற்சாலைகள், வணிகர்கள், வர்த்தக நிறுவனங்களிடம் வரி வசூலிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு வரி வசூலில் முறைகேடு நடப்பதாக சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு புகார் வந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 3 பேர் நேற்று இரவு 8 மணி முதல் வணிகவரித்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று 2-வது நாளாக சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட 3 அதிகாரிகளிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில ஆவணங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். விசாரணையையொட்டி வணிகவரித்துறை அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. அலுவலகத்துக்குள் யாரையும் பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை.
இன்று மதியம் 12 மணியளவில் ஒரு கார் வந்தது. அதில் முகத்தை மூடிய ஒரு நபரை அலுவலகத்துக்குள் சி.பி.ஐ.அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். வணிகவரித்துறை அலுவலகத்தில் விசாரணை செய்யப்பட்ட அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில் அந்த நபரை அழைத்து வந்ததாக தெரிகிறது.
தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்