செய்திகள்

குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கோவில் பிரசாதம் கொடுத்த பெண் அடித்துக்கொலை

Published On 2018-05-09 09:26 GMT   |   Update On 2018-05-09 09:26 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கோவில் பிரசாதம் கொடுத்த மூதாட்டி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள அத்திமூதிர் பகுதியில் இன்று கோவிலுக்கு வந்த 5 பேர் அங்கிருந்த குழந்தைகளுக்கு பிரசாதம் கொடுத்துள்ளனர். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் குழந்தை கடத்துவதற்காக அவர்கள் வந்துள்ளதாக கருதி 5 பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில், ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளார். மேலும், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News