செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதிய தகராறில் வாலிபர் அடித்துக் கொலை

Published On 2018-04-25 10:04 GMT   |   Update On 2018-04-25 10:04 GMT
பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:

தென்காசியை அடுத்த சுந்தரபாண்டிபுரத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் அரிராம் (வயது 26). பட்டதாரியான இவர் பூந்தமல்லி நம்பி நகரில் நண்பர்களுடன் அறையில் தங்கி இருந்தார். அவர் வெளிநாட்டு வேலைக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 18-ந்தேதி இரவு அரிராம் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரி அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிரே 3 வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது அரிராம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், அரிராமை சரமாரியாக தாக்கி தப்பி சென்று விட்டனர்.

தலையில் பலத்த காயம் அடைந்த அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அரிராம் பலியானார்.

இதையடுத்து பூந்தமல்லி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக நம்பிநகர் பகுதியை சேர்ந்த பெருமாளை போலீசார் கைது செய்தனர். அவரது நண்பர்களான சுதாகர், இமானுவேலை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News