செய்திகள்

பொள்ளாச்சி அருகே மின் வாரிய ஊழியர் வீட்டில் நகை திருட்டு

Published On 2018-04-22 10:21 GMT   |   Update On 2018-04-22 10:21 GMT
பொள்ளாச்சி அருகே மின் வாரிய ஊழியர் வீட்டின் கூரையை பிரித்து 16 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் முஸ்தபாராவுத்தார் வீதியை சேர்ந்தவர் காதர்ஷெரீப்(வயது53). அங்கலக்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி சபீதாபேகம். சபீதாபேகத்தின் தாயார் ரமீஜாபீவிக்கு உடல்நிலை சரியில்லாமல் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை உடன் இருந்து கவனித்துக்கொள்ள காதர்ஷெரீப்பும், அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

இந்நிலையில், சபீதாபீவியின் தங்கை ஜெனினா வீட்டை சுத்தம் செய்வதற்காக வீட்டை திறந்து உள்ளே சென்றபோது, மேற்கூரை பிரிக்கப்பட்டும், பீரோ கலைந்தும் கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து காதர்ஷெரீப்புக்கு தகவல் தெரிவித்தார். அவர் வீட்டுக்கு வந்து பீரோவை பார்த்தபோது, அதில் வைத்திருந்த 16 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News