செய்திகள்
தேனி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை
தேனி அருகே மனைவி பிரிந்த ஏக்கத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி அருகே உள்ள பூதிப்புரம், சுப்பிரமணியன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 32). இவரது மனைவி அழகுமயில் (25). கூலி வேலை பார்த்து வந்த செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கம் இருந்து வந்தது.
இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பல முறை செந்தில்குமார் போய் அழைத்தும் அவர் வரவில்லை.
இதனால் மனமுடைந்த செந்தில்குமார் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே உள்ள பூதிப்புரம், சுப்பிரமணியன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 32). இவரது மனைவி அழகுமயில் (25). கூலி வேலை பார்த்து வந்த செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கம் இருந்து வந்தது.
இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பல முறை செந்தில்குமார் போய் அழைத்தும் அவர் வரவில்லை.
இதனால் மனமுடைந்த செந்தில்குமார் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.