செய்திகள்

முத்துப்பேட்டை அருகே குடிநீர் பிடிக்கும் தகராறில் பெண் தற்கொலை

Published On 2018-04-21 10:05 GMT   |   Update On 2018-04-21 10:05 GMT
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே குடிநீர் பிடிக்கும் தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் கண்ணன். இவரது மனைவி கங்காதேவி (வயது 36). கடந்த 12-ந்தேதி இவர்களது வீட்டின் அருகே உள்ளே குடிநீர் குழாயில் கங்காதேவி தண்ணீர் பிடிக்க சென்றார்.

அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 2 பெண்களுக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. இதில் அந்த பெண்கள் கங்கா தேவியை திட்டினர். இதில் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இதைத் தொடர்ந்து வீட்டிற்கு சென்ற கங்காதேவி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார்.

மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று இரவு இறந்தார்.

இதுகுறித்து கங்காதேவி உறவினரான நாகராஜ் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News